நுகர்வோர் உணவு பாதுகாப்பு செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

நுகர்வோர் உணவு பாதுகாப்பு செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் சில உணவகங்களில் கெட்டுப்போன ஷவர்மா போன்ற இறைச்சி வகைகளைச் சாப்பிட்டு பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.இதற்கான தமிழக சுகாதாரத் துறை மா. சுப்ரமணியன் தலைமையில் தமிழகத்தில் அனைத்து உணவகங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி15,236 உணவகங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் 572 உணவு கடைகள் தரமற்ற உணவகங்கள் என்று கண்டறியப்பட்டன. இந்த உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி வகைகள், தரமற்ற உணவு வகைகள் பறிமுதல் செய்யப்பட்ட அழிக்கப்பட்டன. மேலும் 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு, மக்களிடையே தரமான உணவுகளை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மேலும் தமிழகத்தில் உள்ள உணவகங்களில் தரமற்ற கெட்டுப் போன உணவுப் பொருட்கள் இருந்தால் நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் செயலி மூலம் 9444042322 என்ற எண்ணிற்கு whatsapp மூலம் புகாரினைத் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related post

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…