ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில்ரேஷன் கார்டு இல்லாதவர்கள் 5.5 லட்சம் பேர் நிவாரணத் தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்..
இதைத்தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆய்வினை மேற்கொண்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் ரேஷன் கார்டு இல்லாமல் விண்ணப்பித்தவர்களின் தகுதியானவர்களுக்கு ரூபாய் 6000 ரூபாய் நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)