பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பைக்‌ கருதி தமிழக அரசு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

 அதன்படி‌ சென்னையில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. இந்த இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஆட்டோக்களால் ஐடி பணியில் புரியும் பெண்கள் ,இரவு நேரங்களில் பயணத்தை மேற்கொள்ளும் பெண்கள், குழந்தைகள் அனைவரும் பாதுகாப்புடன் பயணிக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…