திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு
ஆதார் எண் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் தினமும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன .இந்தப் பிரசாதத்தை வைஷ்ண பிராமணர்கள் தினமும் தயாரித்து வருகின்றனர். வழக்கம்போல் சாமியைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டு வாங்குவதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பதியில் லட்டு பிரசாதம் வாங்க பக்தர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் எனத் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
