சென்னை செல்வவிநாயகர் கோவிலில் 65 ஆவது ஆண்டு சதுர்த்தி திருவிழா!

சென்னை செல்வவிநாயகர் கோவிலில் 65 ஆவது ஆண்டு  சதுர்த்தி திருவிழா!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 65 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று காலை 6 மணியளவில் பந்தக்கால் கொடியேற்றம் நடைபெறும் .பிறகு 6:30 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும் . பிறகு 8 மணியளவில் பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.

தொடர்ந்து 8.30 மணியளவில் காலை அங்கு உள்ள அனைத்து விதிகளிலும் உற்சவர் விநாயகர் திருவீதி உலா நடைபெறும். அதன் பிறகு மாலை 6:30 மணிக்கு விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகமும் ,இரவு 7 மணிக்கு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குதல் நடைபெறும். இந்தச் செல்வ விநாயகர் ஆலயத்தில் பக்தியோடு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இக்கோயிலில் செல்வ விநாயகரை வழிபட பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர் .

Related post