இந்தியாவில் ஆப்பிள் நிறுவனமானது ஐ போன் உற்பத்தியைப் பல மடங்கு அதிகரிக்க 40 மில்லியன் டாலர் முதலீட்டில் திட்டமிட்டுள்ளது.* சமீபகாலமாக இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லி போன்ற மிகப் பெரிய நகரங்களில் ஆப்பிள் நிறுவனம் அதன் கிளைகளை நிறுவியுள்ளது. இதை தொடர்ந்து ஐபோன்களின் உற்பத்தி இந்தியாவில் வரவேற்பபு பல மடங்கு அதிகரித்துள்ளது.தற்போது இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு (செப்டம்பர் 22ஆம் தேதி) ஆப்பிள் நிறுவனமானது தனது புதிய மாடலான ஐபோன் (15 Apple iPhone 15 ) சீரிஸ் என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியதில் இதுவரை வரலாறு காணாத வகையில் விற்பனையாகியுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
கடந்த ஆண்டில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனமானது தனது உற்பத்தினை 7 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீடு செய்திருந்தது. இந்த நிலையில் இந்திய மக்கள் பெரும்பாலானோர் இந்த iphone வகைகளை வரவேற்று வருவதாலும், விற்பனையும் அதிகரிப்பதால் அடுத்த 5 ஆண்டுகளில் (40 மில்லியன் டாலர்) மதிப்பீட்டில் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனமானது திட்டமிட்டுள்ளதாக தகவல்களை அரசு அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர் .
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)