மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

மதுரை திருப்பரங்குன்றத்தில்  அமைந்துள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெயிலுகந்த அம்மன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் விநாயகர், காலபைரவர், மாணிக்கவாசகர், அர்த்தநாரீசுவரர், கருப்பண்ணசாமி, கத்தரிக்காய் சித்தர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் வழித்தலமாக இக்கோயில் உள்ளது .
அம்மை ,கொப்புளம், மக்கி போன்ற நோய்களை நீக்க சிறுமி வடிவில் அம்மன் அங்கு வந்தாள் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் உப்பு ,மிளகு வாங்கி போட்டால் நோய்கள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் கடந்த மார்ச் மாதம் தேர்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது கோடை காலம் என்பதால் வெயிலுக்கு உகந்த அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது..

Related post

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி ஆரம்பம்! ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் 2024…
தமிழகத்தில்  மாமதுரை விழா!

தமிழகத்தில் மாமதுரை விழா!

தமிழகத்தில் மாமதுரை விழா கொண்டாடப்பட உள்ளது.மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஆக 8-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மா மதுரை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவானது…
மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய துவக்க பணிகள் தொடங்கப்படுகின்றன. சென்னை அடுத்ததாக மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் துவக்கப்படும் என 2021 இல் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி…