மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு ,அவனியாபுரம் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை முன்னிட்டு இந்த வருடம் ( 2024) 15ஆம் தேதி அவனியாபுரம் ,16ஆம் தேதி பாலமேடு ,17ஆம் தேதி அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன .எனவே இதற்காக (madurai.nic.in )என்ற இணையதளங்களில் காளை பிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முன்பதிவுகளைப் பதிவு செய்ய இன்று 12 மணி முதல் இணையதளங்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

காளைகளின் படம் அடையாளம், காளை பிடி வீரர்களின் ஆதார எண் ,கைபேசி எண், முக்கிய ஆவணங்கள் ,சான்றிதழ்களைக் கொண்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் முறைகேடுகளைத் தவிர்க்க Q R கோடு இணைப்புகளுடன் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. உடனடியாக ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

Related post

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி ஆரம்பம்! ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் 2024…
தமிழகத்தில்  மாமதுரை விழா!

தமிழகத்தில் மாமதுரை விழா!

தமிழகத்தில் மாமதுரை விழா கொண்டாடப்பட உள்ளது.மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஆக 8-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மா மதுரை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவானது…
மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய துவக்க பணிகள் தொடங்கப்படுகின்றன. சென்னை அடுத்ததாக மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் துவக்கப்படும் என 2021 இல் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி…