பிளாஸ்டிக் பொருட்களை எடுத்த வர வேண்டாம் வண்டலூர் பூங்கா அறிவிப்பு !

பிளாஸ்டிக் பொருட்களை எடுத்த வர வேண்டாம் வண்டலூர் பூங்கா அறிவிப்பு !

சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் பல்வேறு வகையான வனவாழ் உயிரினங்கள் அனைத்தும் பாதுகாப்பு பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த வனவாழ் உயிரினங்களைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வண்டலூர் பூங்காவிற்கு வருகின்றனர். இந்த வண்டலூர் பூங்காவில் பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை வார விடுமுறையாக அளிக்கப்படுகிறது. 

இந் நிலையில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ,பள்ளி மாணவர்கள், வருகை அதிகரித்து வருகிறது. எனவேகோடை விடுமுறையை முன்னிட்டு (ஏப்ரல் 30 )இன்று செவ்வாய்க்கிழமை வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related post