பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிசில் 33 ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங் மற்றும் ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. .

 இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணிக்கு 33-ஆவது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் இருந்து 117 பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வீரர்களும் பங்கேற்கின்றனர். தமிழக பெருமக்கள் அனைவரும் தமிழக வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்

Related post