தென்காசி ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயில் சித்திரை தேர்த் திருவிழா கோலாகலம்!

தென்காசி ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயில் சித்திரை தேர்த் திருவிழா கோலாகலம்!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பிரசித்தி பெற்ற அழகு பார்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை விழா தொடங்கப்பட்டது . இவ்விழாவில் மே 8 ஆம் தேதி அழகு பார்வதி அம்மன் கோயிலின் சித்திரை தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அழகு பார்வதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

மேலும் இவ்விழாவில் மேளதாளங்களுடன் புலி வேஷம் ,சிலம்பாட்டம் மற்றும் னகலை நிகழ்ச்சிகள் என ஆரவாரமாக கொண்டாடப்பட்டது.இக் கோவிலின் திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் 7 சமுதாய மண்டகப்படிதாரா்கள் செய்துவருகின்றனா்.

Related post