திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி மாத திரு கல்யாணத் திருவிழா கோலாகலம்!

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில்  ஐப்பசி மாத திரு கல்யாணத் திருவிழா கோலாகலம்!

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படும். அந்த வகையில் இக்கோவிலில் இந்த வருடம் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு நவம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. .

நெல்லையப்பர் கோயிலில் வருகிற அக்டோபர் 28ம் தேதி – 11ம் திருநாள்,29ம் தேதி அதிகாலை 4.30 – 05.30 மணிக்குள் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இவ் விழாவின் கடைசி நாளாக நவம்பர் 1ஆம் தேதி சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டிண பிரவேச வீதி உலா நடக்கும். இவ்விழாவை காண்பதற்காக ஐப்பசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர்.

Related post