திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு!

திருச்செந்தூர்  முருகப்பெருமான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு!

முருகப்பெருமான் வைகாசி மாத விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர். எனவே வைகாசி மாதத்தில் வருகின்ற விசாக நட்சத்திரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் முருகன் வழிபாடு நடைபெறுகிறது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்றைய தினம் விசாக நட்சத்திரம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் பல பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் அரோகரா! அரோகரா! என முருகப்பெருமானை வழிபட்டனர். எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருச்செந்தூரின் சாலை வானங்களின் வருகை அதிகரிப்பு காரணமாக போலீசாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related post