திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு !

திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு !

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இரண்டாவது முறையாக திமுக இளைஞரணி மாநாடு நடைபெற இருந்தது. இந்த மாநாட்டில் ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ என்னும் தலைப்பில் மாநாடு நடைபெற இருந்தது. இந்த மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக தேதி மாற்றப்பட்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த மாநாட்டிற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் சென்னையை அடுத்ததாக தூத்துக்குடி, திருநெல்வேலி , தென்காசி மற்றும் கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுயிருப்பதால் மீட்பு பணியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கே என் நேரு, திமுக அமைச்சர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதால் இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related post