டி.என்.பி எல் கோவை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்!

டி.என்.பி எல்  கோவை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்!

டி.என்.பி.எல்  கோவை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்! டி.என்.பி.எல் கிரிக்கெட்  தொடரின் இறுதிப்போட்டி (ஜூலை 12)ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்றது. இறுதிப்போட்டி. லைக்கா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி கோவை அணியின் தொடக்க வீரர்கள் சுரேஷ்குமார், முகேஷ், மற்றும் அதீக் ரஹ்மானு அதிரடியாக ஆடினர். பின்னர் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தன.

இதன் பிறகு இரண்டாவதாக 206 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கினை நோக்கி நெல்லை அணி களமிறங்கியது. ஆனால் கோவை அணியின் ஜித்தேஷ் சுப்பிரமணியன், ஷாருக்கான் ஆகியோரின் பந்துவீச்சால் இடைவிடாது நெல்லை அணி விக்கெட்டில் வீழ்த்தப்பட்டது.   இறுதியாக 101 ரன்கள் எடுத்து (ஆல் அவுட்) ஆன நிலையில் நெல்லை அணி தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றுள்ளது! டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக லைக்கா கோவை கிங்ஸ் சாம்பியன் பட்டம்  பெற்றுள்ளது.

Related post

இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் !

இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம்…

இந்தியாவின் கர்மான் தண்டி சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் . இந்தியாவின் கர்மான் தண்டி சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் டென்னிஸ் தொடர்…
டி.என். பி.எல்  சுற்றில்  கோவை- திண்டுக்கல் மோதல்!

டி.என். பி.எல் சுற்றில் கோவை- திண்டுக்கல் மோதல்!

 டி.என். பி.எல்  சுற்றில்  கோவை- திண்டுக்கல் மோதல்;  ஏழாவது   டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8அணிகள் பங்கேற்றனர்.…