கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை

கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட  பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை

கோவை மாவட்டத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான 20 அடி திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நகரமாக்குதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் கோவை மாநகராட்சியானது1000 கோடி ரூபாய் மதிப்பில் தனது பணிகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் கோவை குறிச்சி குளங்கரையில் தமிழ் எழுத்துக்களால் 20 அடி திருவள்ளுவர் சிலை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திருவள்ளுவர் சிலை ஸ்டீலால் உருவாக்கப்பட்டு மழையும், வெயிலும் தாங்கக்கூடிய தன்மை கொண்டதாக அமையப்பெற்றுள்ளது.

இந்தத் திருவள்ளூர் சிலையில் 3000 தமிழ் எழுத்துக்கள் அமையப்பட்டுள்ளன. மேலும் திருவள்ளுவர் நெற்றியில் அறம் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.திருவள்ளுவர் சிலை காலை மாலை நேரங்களில் வண்ண விளக்குகளால் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அழகாக காட்சியளிக்கிறது. இந்த 20 அடி திருவள்ளுவர் சிலை விரைவில் திறக்கப்பட உள்ளதாக கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு டன் உள்ளனர்.

Related post

கோவையில் நான் புதல்வன் திட்டம் – தமிழக முதலமைச்சர்

கோவையில் நான் புதல்வன் திட்டம் – தமிழக முதலமைச்சர்

 கோவையில் நான் புதல்வன் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் அரசு…
கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா ஜூன் 15ஆம் இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தின் கொடிசியா மைதானத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. மறைந்த…
11-ஆம் வகுப்பு தேர்வுகளில் கோவை மாவட்டம் முதலிடம்!

11-ஆம் வகுப்பு தேர்வுகளில் கோவை மாவட்டம் முதலிடம்!

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டில்…