குன்னூர் சிம்ஸ் பூங்காவில் களைகட்டும் பழக் கண்காட்சி!

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் களைகட்டும் பழக் கண்காட்சி!

 குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64ஆவது பழக் கண்காட்சி மே 24ஆம் தேதி தொடங்கப்பட்டு 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக 2நாட்கள் மட்டும் நடைபெறும் பழக் கண்காட்சி இந்த வருடம் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் .5டன் அளவிலான திராட்சை, சாத்துகுடி, எலுமிச்சை, பேரீச்சம் பழங்களைக் கொண்டு கிங்காங் குரங்கு, மிக்கிமவுஸ், டைனோசர், வாத்து மற்றும் நத்தை போன்ற உருவங்களைக் கொண்டு கண்காட்சி அமையப் பெற்றுள்ளது. 

மேலும் இந்தக் குன்னூர் சிம்ஸ் பழக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகளும களைகட்டி வருவதால் அதிகமான பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. தோட்டக்கலைத்துறை சார்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பழங்கள் கொண்டுவரப்பட்டு அழகாக காட்சி மயமாக்கப்பட்டுள்ளது.

Related post