குடியரசு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி !

குடியரசு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி !

நாடு முழுவதும் 75ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை மெரினா காமராஜர் சாலையில் இரண்டாவது நாளான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே பிரம்மாண்டமாக அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர், ஆளுநர் வருவது போலவும், தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துவது போலவும் ஒத்திகை நிகழ்ச்சிநடைபெற்றது ,

மேலும் கடற்படை, விமானப்படை, தரைப்படை, தேசிய மாணவர்கள் படை ,காவல்துறை தீயணைப்பு துறை ,போன்ற துறைகளிலிருந்து அணிவகுப்பு ஒத்திகை சிறப்பாக நடைபெற்றது. மேலும் துறைசார் 22 அலங்கார ஊர்திகளும் பங்கேற்றது. இந்த நிலையில் சென்னை காமராசர் சாலையில் குடியரசு தினம் (ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை) அன்று குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

Related post