கடம்பவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா!

கடம்பவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா!

கரூர் கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடப்பட்ட கோயிலாக விளங்குகிறது. இக்கோயில் சென்று வணங்கினால் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றதாக ஐதீகம். இக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கார்கள் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

கடம்பவனேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தின் குளித்தலையின் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்டத்தின் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு பதிலாக ஜூலை 27ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Related post