விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு !

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு !

50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, அனல் மின் நிலையங்களில் செயல் திறன் மேம்படுத்துதல், தேரோடும் வீதிகளில் மின்கம்பிகள் புதைவிடங்களாக அமைக்கப்படுதல் உள்ளிட்ட 31 புதிய அறிவிப்புகளை எரிசக்தி துறை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி விவசாயிகளுக்கு பல நல் வழி திட்டங்களை வெளியிட்டுள்ளார்.

 “2023-2024 ஆம் ஆண்டுகளில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் அரசு தனியார் பங்களிப்புடன் 5,000 மெகா வாட் காற்றாலையை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் என்றார். 72 புதிய துணை மின் நிலையங்களும் தொடங்கப்படும், . தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செல்லும் மேல்நிலை மின்கம்பிகள் புதைவிடங்களாக மாற்றப்படும்” என அறிவித்தார்.. மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகளைக் கண்டறிவதற்கு ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும். கரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிய மின்னியக்கங்கள் உருவாக்கப்படும். நெல்லை, ஸ்ரீரங்கம் கோயம்புத்தூர் , திருப்பரங்குன்றம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின்கம்பிகளைப் புதைவிடங்களாக மாற்றி அமைக்கப்படும் ,என 31 புதிய அறிவிப்புகளை அமைச்சர் எரிசக்தி துறையின் கீழ் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

Related post

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி  விவசாயிகளுக்கு பட்டா வழங்கினார்!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விவசாயிகளுக்கு பட்டா வழங்கினார்!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.  1 லட்சம் விவசாயிகளுக்கு நிலப் பட்டாவினை வழங்கினார். ஆந்திர மாநிலங்களில்   பல காலங்களாக     விவசாயம் செய்து வந்த விளைநிலங்களுக்கு பட்டா ஏதும் அறியப்படாமல்…
மின்வாரிய ஊழியருக்கு 6% சம்பள உயர்வு!

மின்வாரிய ஊழியருக்கு 6% சம்பள உயர்வு!

மின்வாரிய ஊழியருக்கு 6% சம்பள உயர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை. மின்வாரிய ஊழியருக்கு 6% சதவீதம் சம்பளம் உயர்த்தப்பட உள்ளது என மின்வாரிய துறை அமைச்சர்…