ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் 70,000 பேருக்குப் பணி நியமன ஆணைகளைப் பிரதமர் மோடி வழங்குகிறார். ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் மூலம் 70,000 பேருக்கான பணி நியமனம் ஆணையை காணொளி வாயிலாக இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி வழங்குகிறார். 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதற்காக ரோஸ்கர் மேளா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். இதைத்தொடர்ந்து இன்றும் 70,000 பேர்களுக்கானப் பணி நியமனம் ஆணையைக் காணொளி வாயிலாக வழங்கி ஆணையைப் பெற்ற இளைஞர்களிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் கர்மயோகி பிரம்ப் மூலம் பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
மத்திய அரசு துறையில் நிதி சேவை துறை ,அஞ்சல், பள்ளி கல்வி, உயர்கல்வி ,பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த்துறை, சுகாதாரம் , அணுசக்தி ரயில்வே அமைச்சகம்,தணிக்கை மற்றும் கணக்கு துறை மற்றும் உள்துறை அமைச்சகம் போன்ற துறைகளுக்குப் பணியாற்ற இளைஞர்கள் ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 70000 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகளை மத்திய அரசு வழங்கி வருகிறது!
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)