தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் டிசம்பர் 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் பல்வேறு தரப்பினார்கள் மின் கட்டண செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு ஏற்ப அபராத தொகை இல்லாமல் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
டிசம்பர் 4 லிருந்து டிசம்பர் 7ஆம் தேதி வரை இருந்த காலக்கெடு, தற்போது டிசம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)