மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு கல்லூரியில் செலுத்தும் கல்வி கட்டணம் விலக்கு!

மாற்றுதிறனாளி  மாணவர்களுக்கு கல்லூரியில்  செலுத்தும் கல்வி கட்டணம் விலக்கு!

 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்த விலக்கு. தமிழக அரசானது மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக  பல நல்வாய்ப்புகளை  ஏற்படுத்தியுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த விலக்கு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

எனவே  அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் வேறு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்க கூடாது என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. எனினும் மீறி வசூலிக்கப்பட்டால் தமிழக அரசால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related post

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பாக மாற்றுத்திறனாளர்களை வைத்து மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசிய போது மாற்றுத்திறனாளிகள்…
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

 தமிழகத்தில் தங்களது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து மடிக்கணினி வழங்குதல், மாணவர்களுக்கு…