மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மிக்ஜாம் புயல் காரணத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் .மேலும் தங்களுடைய உடைமைகளையும் இழந்துள்ள நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப இயலவில்லை. பல்வேறு வணிக நோக்கங்களுக்காக வர்த்தகங்கள் மற்றும் சிறு ,குறு வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
இந்த நிலையில் பல்வேறு வணிகர்கள் வர்த்தக நோக்கங்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்ற நிலையில், தங்களது நிலுவை தொகையைத் திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர் . இதன் காரணமாக நிலுவை கடனைத் திருப்பி செலுத்த கால அட்டவணையை மூன்று மாதங்களுக்கு தளர்த்திட கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)