மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம்12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 23 இன்று அதிகாலை 5:51 மணி அளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்குநீ தரிசனம் வழங்கினார்.
மேலும் அங்கு வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவரும் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் பீச்சியடித்து ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர் .இந் நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக மதுரை மாநகர காவல் துறை சார்பாக 7000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் பிறந்தநாள் ஈடுபட்டிருந்தனர்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)