பிரபல நடிகருமான இயக்குனருமான மாரிமுத்து இன்று காலமானார். இவரின் வயது 57. இவர் சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர். சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் சிறப்பாக நடித்து நிலையில் சீரியலுக்காக டப்பிங் பணியில் இன்று காலை ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
இந்த நிலையில் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. திடீரென நடிகர் மாரிமுத்து அவர்களின் மரணசெய்தியைக் கேட்டு அவருடன் பணிபுரிந்த சக நடிகர்களும், பல சின்னத்திரை நடிகர்களும் , இயக்குனர்களும் பிரபலங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில் கவலையுடன் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)