பள்ளிக் குழந்தைகளுக்குத் தண்டனை வழங்க கூடாது என்று NCPCR அமைப்பு ரூல்ஸ் கலை வழங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் பள்ளி குழந்தைகள் தவறு ஏதும் செய்திருந்தால் அவளுக்குத் தண்டனை கொடுப்பது போன்ற நடவடிக்கைகளைச் செய்யக்கூடாது! என்றும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ,மூத்த மாணவர்கள் போன்ற கண்காணிப்பு குழுக்களை அமைத்து அனைத்து பள்ளிகளின் விதிகளை நடைமுறைப்படுத்த ஐகோர்ட் உத்தரவு வழங்கியுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)