பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு. பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு (ஜூலை 10) இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் வணிக வரி மற்றும் பதிவு துறையில். ” ரசீது ஆவணத்திற்குப் பதிவு கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது அதிகார ஆவண கட்டணம் 20 ரூபாயிலிருந்து சொத்தில் சந்தை மதிப்பில் 1% உயர்த்தப்பட்டுள்ளது, அதிகபட்ச முத்திரை தீர்வு கட்டணம் 25,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
தனி மனிதன் பத்திரத்திற்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்கிறது. செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவு கட்டணம் 4000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு அரசாணை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)