பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இதில் 91.55 %தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 399152 லட்சம் மாணவர்களை விட 422591 லட்சம் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காவிய ஸ்ரீ ,ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவிய ஜனனி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ் ,தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா ஆகிய நான்கு பேரும் 500க்கும் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
இந் நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திட்டமிட்டு மேற்படிப்பை மேற்கொள்ளுங்கள் என்றும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் சோர்வடையாமல் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)