மிக்ஜாம் புயல் காரணமாக மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு மாவட்டங்களில் கொண்டு செல்லப்படும் நிவாரண பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் நலன் கருதி நிவாரணத்திற்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம், எம் ஆர் பி போன்றவை சரியாக உள்ளதா என்ற ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
இந்த நிலையில் நிவாரண பொருட்களை ஆய்வு செய்திட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவினை வழங்கியுள்ளார். இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் குடோன்களில் வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு பிறகு மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)