நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார். லைக்கா நிறுவனமானது தான் தயாரிக்கும் திரைப்படத்தின் கதையை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தற்போது சஞ்சய் ஜேசன் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளார். இதனால் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் காரனுடன் நட்பில் இணைந்துள்ளார். லைக்கா நிறுவனமானது நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் தனது பணியினைத் தொடங்கி பல வெற்றி படங்களான பொன்னியின் செல்வன், ஜெயிலர் போன்ற படங்களை வழங்கி உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்பட தயாரிப்பு டிப்ளமோ படித்தார்.இதைத் தொடர்ந்து லண்டனில் சினிமா துறையை சார்ந்த திரைக்கதை எழுதும் பி .ஏ ஹானர்ஸ் படிப்பினை முடித்து குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
தற்போது நடிகர் தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா ப்ரொடெக்ஷனில் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளார். இவருடைய கதை லைக்கா நிறுவனத்திற்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவர் தனது படிப்பு சார்ந்த க்ரைம் ஸ்கிரிப்டை கொண்டு படத்தினைத் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் லைக்கா நிறுவனமானது கலைஞர்கள், தொழில்நுட்பம் கொண்டு மிக விரைவில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தினைத் தயாரிக்க இருப்பதாக தகவல்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)