நடிகர் கார்த்தி நல்ல சிறந்த கதைக்களம் கொண்ட திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்.கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் முதல் பாகம் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணி கதை வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என அறிவித்திருந்தார். தற்போது நடிகர் கார்த்தி தனது 26 ,27 திரைப்படங்களான வாத்தியாரே, மெய்யழகன் போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு அடுத்தபடியாக மே மாதத்தில் சர்தார் 2 திரைப்படத்தின் பூஜை விழா நடைபெற உள்ளது. சர்தார் 2 திரைப்படம் போதை விவகாரம் குறித்த விழிப்புணர்வு பற்றிய கதைகளாக உருவாக உள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது. நல்ல கருத்தை கொண்ட சர்தார் இரண்டாம் பாகத்தை ரசிகப் பெருமக்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)