திருப்பதி ஏழுமலையான் கோயில் வருகிற 28ஆம் தேதி மூடப்படுகிறது. அக்டோபர் 29ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறுவதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் வருகிற 28ஆம் தேதி இரவு 7 .05 மணி முதல் 29ஆம் தேதி காலை 3:15 மணி வரை நடை சாத்தப்படுகிறது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
சந்திர கிரகணம் முடிந்த பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பிறகு அதிகாலை 5.15 மணிக்கு பக்தர்கள் ஏழுமலையான் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசிக்கும் நாளினை திட்டமிட்டுக் கொள்ளும் படி திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)