திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம் விழாக்கோலாகலம் !

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம் விழாக்கோலாகலம் !

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி மாரியம்மன் சமயபுரம் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தெப்ப உற்சவ விழாவும் கோயிலில் தொடங்கப்பட்டு 8-ஆம் நாளாளில் குதிரை வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் குதிரை வாகனத்தில் அருள் தந்தார். இக்கோயிலில் ந 9-ஆம்நாள் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. 

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப திரு விழாவில் மூன்று முறை மாரியம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் தந்தார். அப்போது வான வேடிக்கைகள் 8:40 மணியளவில் நிகழ்த்தப்பட்டு பக்தர்கள் ஏராளமாக கண்டுகளித்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Related post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவம் புதன்கிழமை 20 ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. தெப்ப…