தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் தடை விதிப்பு தமிழக அரசாணை உத்தரவு !

தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் தடை விதிப்பு தமிழக அரசாணை உத்தரவு !

தமிழ்நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.. தமிழ்நாட்டில் மாஞ்சா நூலை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. காத்தாடி விடுவதற்காக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல்கள் கண்ணாடி துகள்கள், பிளாஸ்டிக் நைலான் பொருட்கள் கொண்டு விஷம் நிறைந்த வேதிப்பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது.. இந்தச் செயற்கை நூலால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த வகையான அபாயகரமான மாஞ்சா நூலினால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

இதனால் பல்வேறு தரப்பினர் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் தமிழக அரசிடம் வைத்திருந்தனர். இந்நிலையில் அக்டோபர் 30-ஆம் தேதி மாஞ்சா நூலினை தயாரிக்கவும் ,விற்பனை செய்யவும், கொள்முதல் ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.”என்று தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

Related post

நாமக்கல்லில்  கிரில் சிக்கன்,ஷவர்மா  விற்க  தடைவிதிப்பு!

நாமக்கல்லில் கிரில் சிக்கன்,ஷவர்மா விற்க தடைவிதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில்  பரமத்தி சாலையில்  உள்ள தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமையில் சவர்மா வாங்கி சாப்பிட்ட  கலையரசி என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். மேலும்…
வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு  தடை – மத்திய அரசு உத்தரவு !

வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு !

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் அனுப்பப்படும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை  உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. எனவே பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை…
இ- சிகரெட் தடை-  மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இ- சிகரெட் தடை- மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இ- சிகரெட்டை தடை-  மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை! இ சிகரெட் விற்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியோ தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு…