இந்தியாவில் மே 28ஆம் தேதி பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந் நிலையில் தமிழகம் முழுவதும் உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட வேண்டும் எனத் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் கிளை, ஒன்றியம், நகரம் மாவட்டம் வாரியாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதை விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினரான புஸ்ஸி ஆனந்த் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகின்றன.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)