தமிழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 9000 போலீசார் பாதுகாப்பு!

தமிழகத்தில்  சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 9000 போலீசார் பாதுகாப்பு!

78-ஆவது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளிலும் மற்றும் அரசு அலுவலங்களிலும் கொண்டாடப்பட உள்ளது. 78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சரும் ‌கொடியேற்ற உள்ளார். இந் நிலையில் சென்னையில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ,முக்கிய மாநகரங்களில் போலீசார் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

இதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளராக காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9000காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related post