தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டத்தில் ரூபாய் 404 கோடி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசாணை (4.7.23) அன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் வருடம் மே மாதம் 7 ஆம் தேதி சட்டசபையில் விதி எண் 110 படி சிற்றுண்டி திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து தற்போதைய 2023-24 கல்வியாண்டில் 30ஆயிரத்து 122 அரசு தொடக்கப்பள்ளிகளில் சிற்றுண்டி உணவுத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது. 1ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
இந்தச் சிற்றுண்டி திட்டத்தினால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தகவல்களைத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்பட்டு வரும் 3 1, 008 அரசு பள்ளிகளில் பயின்று வரும் 15,75,900 லட்சத்து மாணவர்கள் பயனடைவர். தமிழ்நாட்டில் திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவு வழங்கும் திட்டத்தால் மாணவர்களின் சேர்க்கை 100 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் ஒரு மாணவருக்கு ₹12.71 ரூபாய் வரை ஒரு நாளைக்கு செலவீடப்படுகிறது. மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் சிறு தானியங்கள் கொண்டு உணவு தயாரிக்கப்படும் எனக் காலை சிற்றுண்டி திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)