தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2: நடிகர் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க உள்ளார். ‘ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2’ மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ளது. 2010 இல் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், ஆண்ட்ரியா, பார்த்திபன் மற்றும் ரீமாசென் ,உள்ளிட்டோர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியானது. ஆயிரத்தில் ஒருவன் சோழ, பாண்டியர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றை இன்றும் பலர் பேசப்படும் வகையில் அமைந்துள்ள பாரம்பரிய படமாகும்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
இதனிடையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக செல்வராகவன் அறிவித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் தயாரிக்கப்பட உள்ளது. நடிகர் தனுஷ் ஹாலிவுட்,பாலிவுட் எனப் பல மொழிகளில் கலக்கி வருகிறார். தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடிப்பதன் காரணமாக ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. 2024 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் பணிகள் துவக்கப்படும் எனத் தகவல்கள் வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)