சென்னையில் அனைத்து வாகனங்களுக்கான வேக வரம்பு கட்டுப்பாடு நவம்பர் 4 முதல் நடைமுறை என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்ததுள்ளது. தற்போது சென்னையில் 6 லட்சத்திற்கு மேலாக வாகனங்கள் இயங்கக் கொண்டு வருகின்றனர். சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக வாகன ஓட்டிகளின் வேகங்களில் வரம்பு தமிழக போக்குவரத்து காவல்துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
அந்த வகையில் சென்னையில் நவம்பர் 4ஆம் தேதி முதல் கனரக வாகனங்கள் 50 கிலோமீட்டர் வேகம், இலகுரக வாகனங்களுக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்களுக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும், ஆட்டோ வாகனத்திற்கு பகல் நேரத்தில் 40 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்க வேண்டும் என்றும், சென்னை குடியிருப்பு பகுதிகளில் செல்லும் அனைத்து வாகனத்திற்கும் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்துள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)