2024- 25 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் மேல்நிலை தேர்வுகளில் பன்னிரண்டாம் வகுப்பு 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1761 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவ்விழாவில் தலைமை ஆசிரியர்களின் கருத்து கணிப்புக்கள் கேட்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என்றும்,தமிழ் பாடத்தில் 100% மதிப்பெண்கள் பெற்ற பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு சேர்ந்த 43 மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)