கோவையில் அமைந்துள்ள ஈஷா மையம் பராமரிப்பு பணிக்காக (மே 30) இன்று மூடப்பட்டுள்ளது. கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலுடன் ஈசா யோக மையம் அமைந்துள்ளது. இங்கிருக்கும் தியான லிங்கத்தை மற்றும் ஆதியோகி சிலையை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் பல நாடுகளில் இருந்து வருகின்றனர்.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
ஈஷா யோக மையத்தில் மன அமைதிக்காக யோகா கலைகள் கற்றுத் தரப்படுகின்றன.இங்கு மகா சிவராத்திரி மிக உற்சாகமாக நடைபெறும். இந்த வருடம் சிவராத்திரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். ஆண்டுதோறும் பராமரிப்பு பணிக்காக ஈஷா யோக மையம் வருடத்தில் ஒரு நாள் மூடப்படும். இந்த வருடம் (மே 30)இன்று மூடப்படுகிறது. மே 31ஆம் தேதி வழக்கம் போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)