மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை 9: 00 மணியளவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்கள், பல கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.அதன் பிறகு காலை 9.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கு அவர் மலர் மாலை வைத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டுப்போட்டிகள் எனத்தொடர் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)