கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல்! கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கூட்டம் அதிகமாக குவிந்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. எனவே பருவநிலை மாற்றத்தின் காரணமாக மழை பெய்ய தொடங்கியுள்ளதால் கடலூர் மாவட்டத்தில் ‘மர்ம காய்ச்சல்கள்’ அதிகரித்து உள்ளன. இதனால் இன்று கடலூர் அரசு மருத்துவமனையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என 1000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். எனவே மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் புறநோயாளிகள் பிரிவில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை குறித்து புகார் எழுந்துள்ளது.. மேலும் பொது சுகாதாரத் துறை சார்பாக பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)