ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 8ஆவது நினைவு தினம். இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் , ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செய்த சாதனைகள் பல. அறிவியலில் பல சாதனைகள் புரிந்தும், மாணவர்களுக்குப் பல போதனைகளை கற்பித்தவர் விஞ்ஞானி ஏ.பி.ஜே அப்துல் கலாம். இந்தியாவின் குடியரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பேய்க் கரும்பு என்ற ஊரில் இந்திய அரசால் அடக்கம் செய்யப்பட்டது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2023/03/59973ee9-2042-40ac-b3db-b9cd8672bc6b.png)
ஆண்டுதோறும் அப்துல்கலாம் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் ராமேஸ்வரத்தின் பேய்க் கரும்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவிடத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவு கூறப்படுகிறது. ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 8 -ஆவது வருடம் நினைவு நாளான (ஜூலை 27) இன்று தேசிய நினைவிடத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவு கூர்ந்து கொண்டாடி வருகின்றோம்.. ஏ.பி.ஜே அப்துல் கலாம் மறைந்தும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)