ஊட்டி கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் திண்டுக்கல், நீலகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள ஊட்டி ,கொடைக்கானலில். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
மேலும் இங்கு வணிக ரீதியாகவும் வாகனங்களும் வருகின்றனர். எனவே இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு இ -பாஸ் மூலம் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. (மே 7 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை) இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவினை வழங்கி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ்களை “epass.tnega.org” என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)