இந்திய விண்வெளி பெண் வீரர் கல்பனா சாவ்லா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர். இவர் பள்ளி படிப்பை முடித்த பிறகு 1982இல் அமெரிக்காவில் உள்ள டெக்ஸா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேற்படிப்பை முடித்தார். அதன் பிறகு 1988 இல் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் இவருக்கு 1997 STS- 87 என்னும விண்கல பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து STS-107 விண்கல பயணத்தில் விண்வெளிக்குச் சென்று பூமிக்கு வரும்போது விண்கலம் வெடித்து கல்பனா சாவ்லா உயிரிழந்தார். எனவே இந்தியாவில் முதன் முதலில் விண்வெளியில் கால் தடம்படித்த வீராங்கனை கல்பனா சாவ்லா பெருமைக்குரியவராக உள்ளார் .
இதைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கல்பனா சாவ்லா விருதுகளும் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன . இந்தக் காலகட்டத்திலும் இளம்பெண்களின் சவால்களுக்கு இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா சாதனைகள் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)