ரேஷன் கடை ஊழியருக்கு இன்பச் செய்தி

ரேஷன் கடை ஊழியருக்கு இன்பச் செய்தி

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு, ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, என 1.1.2023 ஆம் தேதி முதல் நியாய விலை கடை ஊழியர்களுக்கு 2021 பிப்ரவரி 22 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. 2022 ஜனவரி ஒன்று முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்நிலை வழங்குமாறு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து 2022 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நியாய விலை கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களுக்கு 28% உத்தரவிட்டார். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களைப் பெறவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் நியாயவிலை கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள், 2,852 கட்டுநர்கள் மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இதனால் ஆண்டுடொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தித் தர தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு(ரூ8,600-ரூ29,000ம்),கட்டுனர்களுக்கு(ரூ7,800_ரூ26,000ம்) சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின்  படப்பிடிப்பு ஆரம்பம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் அடுத்தபடியாக கோட் திரைப்படத்திற்கு அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கிறார். வலிமை, துணிவு திரைபடத்தின் இயக்குநரான ஹெச் வினோத்இந்…
கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

 தமிழ்நாட்டில் தமிழ் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி, கோதையாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வடகிழக்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரன கன்னியாகுமரியில் உள்ள…
தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…