கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்

கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்

திருநெல்வேலியில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆறு காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம் பூதகரமாக வெடித்துள்ளது. அம்பா சமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வரும் பல்வீர் சிங் சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களைப் பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக புகார் எழும்பியுள்ளது. பத்துக்கு மேற்பட்டோர் இது போன்ற இதுபோன்ற தண்டனை அளித்துள்ளதாகவும் ,அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனைத் தொடர்ந்து, விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி தண்டனை அளித்த ஏ.எஸ்.பி பல்வீர் சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன் மகாதேவி சார் ஆட்சியருக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே ஏ எஸ் பி பல்விர் சிங் காத்திருப்போர் போர்பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related post

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின்  படப்பிடிப்பு ஆரம்பம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் அடுத்தபடியாக கோட் திரைப்படத்திற்கு அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கிறார். வலிமை, துணிவு திரைபடத்தின் இயக்குநரான ஹெச் வினோத்இந்…
கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

 தமிழ்நாட்டில் தமிழ் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி, கோதையாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வடகிழக்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரன கன்னியாகுமரியில் உள்ள…
தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…