கேரளாவில் செல்போன் வெடித்து சிதறியதில் சிறுமி பலி!

கேரளாவில் செல்போன் வெடித்து சிதறியதில் சிறுமி பலி!

கேரளாவில் செல்போன் வெடித்ததில் 8 வயது சிறுமி பலி.கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில்  அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ 8 வயது சிறுமி நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல் ஃபோனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து சிதறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நேரம் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் பேட்டரியின் வெப்பம் அதிகமாகும் எனவே குழந்தைகளிடம் அதிக நேரம் மொபைல் போனை கொடுக்க வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்களே உஷாராக இருங்கள்!

 

Related post

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,…
தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும்  என எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என எச்சரிக்கை!

தமிழ்நாடு தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இதில் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என எச்சரிக்கை செய்தனர்.…
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சலின் எதிரொலியாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா…